Tamilar’s views on Economic Development
Authors: Dr.R.Kavitha
Date: October-December 2019
Page Numbers:
Issue: 02
Volume: 02
Abstract : ஒரு மனிதன் தனக்காக தனது குடும்பத்திற்காக மட்டுமே பொருள் ஈட்டுகிறான் என்றால் அவனை மனித குலத்தில் ஒருவனாக வைத்து சங்க காலத்து ஆன்றோர் சான்றோர் பெருமக்கள் மதிக்க மாட்டார்கள். தனக்காக மட்டுமல்லாமல் தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்காகவும், இனத்திற்காகவும் எவர் ஒருவர் உழைக்கின்றாரோ அவரையே மனிதன் என்றும் தலைவன் என்றும் போற்றுகின்றார்கள். சங்ககாலத்தில் நீர் வளம், நில வளம், கனிம வளம் மட்டுமல்லாமல் மனித வளமும் நிறைந்து காணப்பட்டது. மனித வளத்தினால் தான் மனிதர்கள் ஒன்றாய் இணைந்து சமூகமாய், சமூகமாய் மனிதமாய், நிறைவாய் வாழ்ந்திருக்கின்றார்கள். இன்றைய குழலில் மனித வளம் குறைந்து கொண்டே வருவதால் இயற்கை வளமும் குறைந்து கொண்டே வருகின்றது. மனிதர்களுக்குள் சச்சரவு, சண்டை, சச்சரவு போன்ற ஏற்படக்கூடியன பெருகுகின்றன. அனைத்திற்கும் மிக முக்கிய காரணம், ‘பொருளாதாரம்’.

